BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
கூடங்குளம் அணு உலை ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்ததா?
கூடங்குளம் அணு உலை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இவை ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து வந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
'த.வெ.க ஆட்சியில் முதல் காவல் மரணம்' - கன்னியாகுமரி மாற்றுத் திறனாளி இளைஞர் உயிரிழப்பில் என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 33 வயதான மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெஸ்ஸி அதிகம் ஓடாமல் நடந்தே சாதிப்பது எப்படி? வயதை வென்ற பரிணாமத்தின் கதை
1962-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலக கோப்பையை தக்க வைக்கும் முதல் அணியாகவும் ஒட்டுமொத்த உலககோப்பை வரலாற்றில் மூன்றாவது அணியாகவும் அர்ஜென்டினா வருமானால் அதன் மையப்புள்ளியாக லியோனல் மெஸ்ஸி இருப்பார்.
சிஎஸ்கேவை உச்சத்திற்கு கொண்டு சென்ற ஃப்ளெமிங் அதன் சரிவுக்கும் ஒரு காரணமானது எப்படி?
ஒரு பலமான, சீரான சூப்பர் கிங்ஸ் அணியைக் கட்டமைத்ததில் ஃபிளெமிங் பங்களிப்பு என்ன? சூப்பர் கிங்ஸின் சரிவில் அவர் செய்த தவறுகள் என்ன? எந்த விஷயத்தில் அவர் பின்தங்கினார்? அலசுவோம்.
'500 ரூபாய் நோட்டுகள்' - ராமர் கோவிலை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலிலும் 'காணிக்கை திருட்டு' புகார்
அயோத்தி ராமர் கோவில் காணிக்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த விவகாரம் தற்போது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, உத்தரகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் கோவிலில் காணிக்கை செலுத்துவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது கோவில் நிர்வாகத்தின் உள்நாட்டு விசாரணையைத் தாண்டி, காவல்துறை விசாரணை, மாநில அரசின் உயர்மட்ட விசாரணை மற்றும் அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.
மருத்துவக் கழிவா, அதிசய மருந்தா? மனித நஞ்சுக்கொடி கடத்தலின் பின்னணி என்ன?
பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட ஒரு குற்றவியல் விசாரணை, முதுமையைத் தடுக்கும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் இருந்து மனித நஞ்சுக்கொடிகள் கடத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால், பிரசவத்திற்குப் பிறகு தூக்கி எறியப்படும் தற்காலிக உறுப்பான நஞ்சுக்கொடியை மையமாகக் கொண்டு, உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு சந்தை உருவாகியுள்ளது என்ற ஒரு மிகப்பெரும் விஷயத்தை இந்த வழக்கு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
நாகர்கோவில் காசி வழக்கு: ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள் என்ன?
பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தி பல லட்சம் ரூபாயைப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த டி.காசி என்கிற சுஜிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
அர்ஜென்டினா vs இங்கிலாந்து இடையே 60 ஆண்டுகளாக நீளும் மோதலின் வரலாறு
2026 கால்பந்து உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் மோதவுள்ள இங்கிலாந்து - அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே, 1962 முதல் உலகக் கோப்பை வரலாற்றில் நீடித்து வரும் ஆறு தசாப்த கால பரபரப்பான ஆட்டங்கள், சிவப்பு அட்டைகள், அரசியல் பதற்றங்கள் மற்றும் வரலாற்றுச் சர்ச்சைகளை பிபிசி ஸ்போர்ட் திரும்பிப் பார்க்கிறது.
'இரு வெற்றியாளர்களின் தொடக்கம்'; மெஸ்ஸி கையில் குழந்தையாக யமால் - சுவாரஸ்ய பின்னணி
மெஸ்ஸியின் கைகளில் இருந்த அந்தக் குழந்தை, விரைவில் மெஸ்ஸியின் காலடிச்சுவடுகளைப் பின்பற்றி, இருபது வயதை எட்டுவதற்கு முன்பே கால்பந்து உலகில் ஒரு புதிய பரபரப்பை உருவாக்கும் என்று அந்தப் புகைப்படக் கலைஞர் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. மெஸ்ஸி கையில் வைத்திருந்த அந்தக் குழந்தைதான் லாமின் யமால்.
பழனி முருகன் கோவில் மடத்துக்கு சொந்தமான நிலம் தனிநபர்களுக்கு விற்பனையா? சர்ச்சை என்ன?
பழனி மலை அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக 4 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
ஃபிஃபா உலகக் கோப்பை: பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு தகுதி; எம்பாப்பேயின் கனவு கலைந்தது
பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், வெற்றிபெற அதிக வாய்ப்புள்ள அணியாகக் கருதப்பட்ட பிரான்ஸை மிகச்சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஸ்பெயின் வீழ்த்தியது.
டி20 போட்டிகளில் பலவீனமாகத் தெரிந்த இந்திய அணி இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது எப்படி?
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், எஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
இந்தியா: இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் - பிபிசி புலனாய்வு
இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருவதாக 'பிபிசி ஐ' புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது?
'வாஷிங் மெஷின் டிரம்மில் அடைப்பு': பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்களின் குழந்தைகளுக்கு காப்பகத்தில் என்ன நடந்தது?
சிறு குழந்தைகளிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் பெங்களூருவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தின் பெண் ஊழியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பழைய புழுங்கல் அரிசிக்கு அதிக மவுசு ஏன்? சமைக்கும் போது என்ன நடக்கிறது?
பொதுவாக புதிய உணவுப் பொருட்களுக்குத்தான் அதிக மதிப்பு இருக்கும். ஆனால் அரிசி விஷயத்தில் மட்டும் இதற்கு நேர்மாறான நிலை காணப்படுகிறது. புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியை விட, ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் சேமித்து வைக்கப்பட்ட புழுங்கல் அரிசிக்கு அதிக விலை கொடுக்க பலர் தயாராக இருக்கின்றனர்.
திமுக - அதிமுகவை இணைக்கும் கருணாநிதி - எம்ஜிஆரின் முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
திமுக, அதிமுக-வை இணைக்கும் முயற்சி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்ததாக கருணாநிதி 'நெஞ்சுக்கு நீதி' நூலில் எழுதியுள்ளார். அப்போது என்ன நடந்தது? அந்த இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
'மாமனாரை கொன்ற மருமகளை கைது செய்யாத காவல்துறை': தற்காப்பு பற்றி சட்டம் கூறுவது என்ன?
"புலன் விசாரணையில் தற்காப்புக்காக கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆகவே பிஎன்எஸ் சட்டப்பிரிவு 34ஐ சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படும்" எனக் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.
பெண்ணின் வீட்டுக்கு அடியில் '40,000 உடல்கள்' - விசாரணையில் என்ன தெரியவந்தது?
1996ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று, புதுப்பித்தல் பணிகளின் போது, மெர்சிட் கைமரைஸ் டோஸ் அஞ்சோஸ் எலும்புகளைக் கண்டெடுத்தார் - அவை சுமார் 1770 மற்றும் 1830ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பயன்படுத்தப்பட்டதும், அத்துடன் தோராயமாக 40,000 சடலங்களைக் கொண்டிருந்ததாக நம்பப்படுவதுமான, நீண்ட காலமாக காணாமல் போன 'புதிய கருப்பர்களின் மயானத்தின்' எச்சங்கள் ஆகும்.
கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இரான் போருக்கு முந்தைய நிலைக்கும் கீழே சரிந்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலையில் இவ்வளவு கடுமையான சரிவு ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் சில்லறை எரிபொருள் விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை. கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? அது எப்போது குறையும்?
இரானின் முடக்கப்பட்ட சொத்துகள் இந்தியா, சீனா உள்பட எந்தெந்த நாடுகளில் உள்ளன?
முடக்கப்பட்டுள்ள இரானின் சொத்துகளை விடுவிப்பது என்பது, இரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மிகவும் விவாதத்திற்குரிய மற்றும் சிக்கலான பிரச்னைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட எந்தெந்த நாடுகளில் அந்த சொத்துகள் உள்ளன?
'அணு ஆயுதங்களை அதிகரிக்கும் சீனா': அமெரிக்கா, ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் எந்த இடத்தில் உள்ளது?
சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது அணுசக்தி திறன்களை வேகமாக நவீனப்படுத்தியுள்ளது என்று மேற்கத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
'தோண்டத்தோண்ட எலும்புக் கூடுகள்': இலங்கையின் செம்மணி - சித்துபாத்தி புதைகுழி கவனம் பெறுவது ஏன்?
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 17 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், இன்றைய காலத்திலும் அதன் பாதிப்புகள் மக்கள் மத்தியில் இருந்த வண்ணமே காணப்படுகின்றது. குறிப்பாக மனித புதைகுழிகள், புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அவ்வப்போது தோண்டப்பட்டு வருகின்ற பின்னணியில் தற்போது யாழ்ப்பாணத்தில் தோண்டப்பட்டு வரும் செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
40 வயதை தாண்டிய ஆண்கள் அவசியம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
முறையான மருத்துவப் பரிசோதனைகள் நோய்களைக் கண்டறிவதுடன், வாழ்க்கை முறையை மேம்படுத்திக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை அளிக்கின்றன. எனவே, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் சில முக்கியமான மருத்துவப் பரிசோதனைகளைத் தவறாமல் செய்துகொள்வது அவசியமாகும்
பூம்புகார் துறைமுகம் எங்கே இருந்தது? அதற்கு என்ன ஆனது? ஆய்வில் புதிய தகவல்
சங்க இலக்கியங்களில் கூறப்படும் பூம்புகார் நகரின் இருப்பு மற்றும் வரலாறு அறிவியல்பூர்வமாக எவ்வளவு தூரம் உறுதி செய்யப்பட்டுள்ளது? கடலுக்குள் மூழ்கிவிட்டதாகக் கூறப்படும் இந்த நகரம் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் தெரிய வந்தது என்ன?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































