You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஊதா நிற உருளைக் கிழங்குகளை விளைவிக்கும் பஞ்சாப் விவசாயி
இது சாதாரண உருளைக் கிழங்குகளிலிருந்து வேறுபட்ட சிறப்பு வகையான உருளைக் கிழங்கு. பொதுவாக உருளைக் கிழங்குகள் வெளியே பழுப்பு நிறத்திலும் உள்ளே வெள்ளை நிறத்திலும் தான் இருக்கும். ஆனால் இது உள்ளேவும் வெளியேவும் ஊதா நிறத்திலே உள்ளது.
குர்ஜோத் சிங் தற்போது 40 ஏக்களில் பயிரிட்டு வருகிறார். அவரைப் பொருத்தவரை இந்தப் பயிருக்கு உகந்த வானிலை பஞ்சாபில் உள்ளது.
இந்திய அரசின் வேளாண் துறையும் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதன் குஃப்ரயா ஜமுனியா என்கிற வகையை அறிமுகப்படுத்தியது.
பஞ்சாபில் ஊதா உருளைக் கிழங்கு வேளாண்மை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. ஆனால் சாதாரண வகையைவிட இந்த உருளைக் கிழங்கு கூடுதல் பலனளிக்கும் என தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு