காணொளி: ஈரோடு அருகே தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டு யானை பத்திரமாக மீட்பு
காணொளி: ஈரோடு அருகே தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டு யானை பத்திரமாக மீட்பு
பிரசுரிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், அருண் என்பவரின் விவசாய நலத்தில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு நிலத்தொட்டியில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்தது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் காட்டு யானை எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



