தவெக தலைவரை முதலமைச்சராக பொறுப்பேற்க ஆளுநர் அழைப்பு
தவெக தலைவர் பெரும்பான்மைக்கான ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் அவரை முதலமைச்சராக பொறுப்பேற்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்.
தவெக சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை தவெக தலைவர் விஜய் வழங்கினார் என்றும், மேலும் அவருக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தற்கான கடிதங்களை வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் சி ஜோசப் விஜயை தமிழ்நாடு முதலமைச்சராக தேர்வு செய்து ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மே 13ம் தேதிக்குள் தனது பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சராக நாளை காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவி பிரமாணம் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.